நியூசிலாந்துக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்படும் நுழைவுக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் சுற்றுலாத் தலங்களைப் பராமரிக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் கூடுதல் நிதியைத் திரட்ட முடியும் என எதிர்பார்க்கப்பட்டு நடந்துளது.
இந்தக் கட்டண உயர்வு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை ஓரளவுக்குப் பாதிக்கலாம் எனக் கருதப்பட்டாலும், நாட்டின் இயற்கை வளங்களை நீண்ட கால அடிப்படையில் பாதுகாப்பதற்கு இது மிக அவசியம் என அதிகாரிகள் கருதுகின்றனர். இது குறித்த பொதுமக்களின் கருத்துகளைக் கேட்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், புதிய கட்டண விவரங்கள் மற்றும் அவை நடைமுறைக்கு வரும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.








