Apr 20, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

மேற்கு ஜாவா டோல் சாவடியில் விபத்து: எண்மர் மரணம், 11 பேர் காயம்

Share:

ஜகார்த்தா, பிப்.5-

இந்தோனேசியா, மேற்கு ஜாவாவில் Ciawi டோல் சாவடியில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் குறைந்தது எண்மர் மரணமடைந்தனர். 11 பேர் காயத்திற்கு இலக்காகினர்.கனிமவள நீர் பாட்டில்களை ஏற்றுயிருந்த லாரி, டோல் கட்டுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த சில வாகனங்களை மோதியது.

ஜகார்த்தா நோக்கிச் செல்லும் சாலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது. பிரேக் கோளாறு காரணமாக அந்த லாரி பிற வாகனங்களை மோதியிருக்கலாம் என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போக்குவரத்து காவல் துறை கூறியது.

அந்த லாரி டோல் சாவடியில் நின்று கொண்டிருந்த போது முன்னே இருந்த ஆறு வாகனங்களை மோதியது. அவற்றில் மூன்று வாகனங்கள் தீப்பற்றிக் கொண்டன. சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் Ciawi மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். அவ்விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு