Jun 17, 2026
Thisaigal NewsYouTube
ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் மஹாதேவ்: 12 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்
உலகச் செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ஆபரேஷன் மஹாதேவ்: 12 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்

Share:

புதுடெல்லி, ஆகஸ்ட்.01-

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவத்தினர் மேற்கொண்டு வரும் ஆபரேஷன் மஹாதேவ் மூலம், கடந்த 100 நாட்களில் 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்.,22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 அப்பாவி மக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தினர் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் மூலம், பாகிஸ்தானில் உள்ள 100 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

அதன் பிறகு, ஜம்மு காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை, 'ஆபரேஷன் மஹாதேவ்' என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் மேற்கொண்டு வந்தனர். அண்மையில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆபரேஷன் மஹாதேவ் மூலம், கடந்த 100 நாட்களில் இந்திய ராணுவத்தால் தேடப்பட்டு வந்த 12 முக்கிய பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள். இவர்கள் ஜம்மு காஷ்மீரில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை