Jun 17, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா மீதான இறக்குமதி வரி 25 விழுக்காடாகும்
உலகச் செய்திகள்

மலேசியா மீதான இறக்குமதி வரி 25 விழுக்காடாகும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.08-

மலேசியா மீதான இறக்குமதி வரி 25 விழுக்காடாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். இது குறித்து ஓர் கடிதம் வாயிலாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மலேசியா மீதான 25 சதவீத இறக்குமதி வரி விதிப்பு ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது. பல நாடுகளின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளிலிருந்து அமெரிக்க உள்நாட்டு தொழில்துறையைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை அவசியமாகிறது என்று டிரம்ப் அந்த கடிதத்தில் விளக்கியுள்ளார்.

மற்ற நாடுகள் அமெரிக்காவைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இனி அனுமதியில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

25 சதவீத வரிகளை எதிர்கொள்ளும் நாடுகளில் ஜப்பான், தென் கொரியா, துனிசியா, கஜகஸ்தான் ஆகியவை அடங்கும். அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்கா, போஸ்னியா ஆகிய நாடுகளுக்கு 30 விழுக்காடு வரியும், செர்பியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு 35 விழுக்காடு வரியும், கம்போடியா, தாய்லாந்து முதலிய நாடுகளுக்கு 36 முதல் 40 விழுக்காடு வரை வரியும், ஏனைய நாடுகளுக்கு இதை விடக் கூடுதல் வரியையும் டிரம்ப் நிர்ணயித்துள்ளார்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை