Jun 17, 2026
Thisaigal NewsYouTube
விமானத்தின் கதவைத் திறக்க முயன்றவர் மீது குற்றச்சாட்டு
உலகச் செய்திகள்

விமானத்தின் கதவைத் திறக்க முயன்றவர் மீது குற்றச்சாட்டு

Share:

சிட்னி, ஏப்ரல்.07-

சிட்னி சென்ற விமானத்தில் விமானத்தின் கதவைத் திறக்க முயன்றதாகவும், பணியாளர் ஒருவரைத் தாக்கியதாகவும் 46 வயதான ஜோர்டானியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய காவல்துறையை மேற்கோள்காட்டி ஜெர்மன் செய்தி நிறுவனம் (dpa) அதனைத் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூரில் இருந்து சென்ற விமானத்தின் பின்பக்க அவசரக் கதவை அவர் திறக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர் மீண்டும் தனது இருக்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு, அந்நபர் மற்றோர் அவசர கதவைத் திறக்க முயன்றுள்ளார்.

அந்த நபர் பின்னர் பணியாளர்கள் மற்றும் பயணிகளால் கட்டுப்படுத்தப்பட்டார். அச்சமயத்தில் அவர் ஒரு விமான ஊழியரைத் தாக்கியதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவ்வாடவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை