Aug 14, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் விமானம் தொழில்நுட்பக் கோளாறுக்கு இலக்கானது
உலகச் செய்திகள்

சிங்கப்பூர் விமானம் தொழில்நுட்பக் கோளாறுக்கு இலக்கானது

Share:

சிங்கப்பூர், ஜூலை.08-

ஆஸ்திரேலியா, பிரிஸ்பனிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்சுக்குச் சொந்தமான SQ 246 விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் பெர்த்துக்குத் திருப்பப்பட்டது.

இச்சம்பவம் இன்று அதிகாலையில் ஏற்பட்டது. நேற்று ஜுலை 7 ஆம் தேதி இரவு, பிரிஸ்பன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம், இன்று அதிகாலை 5 மணிக்குச் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்தது.

எனினும் அந்த விமானம் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதியான பிரிஸ்பனிலிருந்து புறப்பட்டு, அந்த நாட்டின் விளிம்பில் உள்ள புரூம் நகரை நோக்கிப் பயணித்தப் பின்னர் பெர்த்துக்குத் திருப்பப்படுவது விமான கண்காணிப்பு வலைத்தளமான Flightradar24 இல் தெரிய வந்துள்ளது.

அந்த ஏர்பஸ் A350 ரக விமானம், வானில் பறக்கும் போது, தொழில்நுட்பச் சிக்கலை எதிர்நோக்கியது என்று ஆஸ்திரேலியா பத்திரிகை கூறுகிறது.

விமானத்தில் இருந்த 272 பயணிகளும், 15 பணியாளர்களும் காலை 7 மணியளவில் பெர்த்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

Related News

ஆப்பிரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு கடத்தல்: 1.2 டன் யானைத்தந்தம் பறிமுதல்!

ஆப்பிரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு கடத்தல்: 1.2 டன் யானைத்தந்தம் பறிமுதல்!

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு