Jun 17, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் விமானம் தொழில்நுட்பக் கோளாறுக்கு இலக்கானது
உலகச் செய்திகள்

சிங்கப்பூர் விமானம் தொழில்நுட்பக் கோளாறுக்கு இலக்கானது

Share:

சிங்கப்பூர், ஜூலை.08-

ஆஸ்திரேலியா, பிரிஸ்பனிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்சுக்குச் சொந்தமான SQ 246 விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த விமானம் பெர்த்துக்குத் திருப்பப்பட்டது.

இச்சம்பவம் இன்று அதிகாலையில் ஏற்பட்டது. நேற்று ஜுலை 7 ஆம் தேதி இரவு, பிரிஸ்பன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம், இன்று அதிகாலை 5 மணிக்குச் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அட்டவணையிடப்பட்டு இருந்தது.

எனினும் அந்த விமானம் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதியான பிரிஸ்பனிலிருந்து புறப்பட்டு, அந்த நாட்டின் விளிம்பில் உள்ள புரூம் நகரை நோக்கிப் பயணித்தப் பின்னர் பெர்த்துக்குத் திருப்பப்படுவது விமான கண்காணிப்பு வலைத்தளமான Flightradar24 இல் தெரிய வந்துள்ளது.

அந்த ஏர்பஸ் A350 ரக விமானம், வானில் பறக்கும் போது, தொழில்நுட்பச் சிக்கலை எதிர்நோக்கியது என்று ஆஸ்திரேலியா பத்திரிகை கூறுகிறது.

விமானத்தில் இருந்த 272 பயணிகளும், 15 பணியாளர்களும் காலை 7 மணியளவில் பெர்த்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை