Jun 17, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் இருவர் பலி
உலகச் செய்திகள்

அமெரிக்காவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் இருவர் பலி

Share:

வாஷிங்டன், ஆகஸ்ட்.18-

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரிகள் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைப் போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவின் வடக்கு உட்டா நகரில் இச்சம்பவம் நிகழ்ந்தது. காயமுற்ற போலீஸ் அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு உள்ளார். வீட்டுக் கலவரம் குறித்த புகாரை தொடர்ந்து, போலீசார் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தில், ஒரு போலீஸ் நாயும் காயம் அடைந்தது. அதிகாரிகள் சுடப்பட்ட பிறகு, அருகில் இருந்தவர்கள் அந்த நபரை ஆயுதத்தைக் கீழே போடுமாறு வற்புறுத்தினர். பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைப் போலீசார் கைது செய்தனர். ஆனால் அந்த நபரின் விவரங்களைப் போலீசார் வெளியிடவில்லை. அமெரிக்காவில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை