Jun 17, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

டிக் டாக்கில் அநாகரிகமாகப் பதிவேற்றியதால் தந்தை சொந்த மகளையே சுட்டுக் கொன்றுள்ளார்

Share:

குவேட்டா, ஜன.30-

பாகிஸ்தான், குவேட்டாவில் தந்தை ஒருவர் தமது சொந்த மகளையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். 15 வயதான அவரது அம்மகள் டிக் டாக்கில் பதிவேற்றியிருந்த பதிவுகள் அநாகரிகமாக இருந்ததால் அதிருப்தி அடைந்த அத்தந்தை அச்செயலைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தமது மகளைச் சுட்டுக் கொன்று விட்டதாக தொடக்கத்தில் அந்த ஆடவர் கூறியிருந்தார். எனினும் பின்னர் அவர் தாம்தான் அவ்வாறு செய்ததாக ஒப்புக் கொண்டார்.

அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவரைத் தவிர்த்து உறவினரான மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்ட 15 வயது இளம் பெண் அமெரிக்காவில் பிறந்தவர். அவர் உடை உடுத்தும் விதம், வாழ்க்கை முறை, சுதந்திரமாகப் பழகும் செயல் ஆகியவற்றில் அத்தந்தைக்கு உடன்பாடில்லை என்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆடவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவராவார்.

அவரது கைப்பேசி பறிமுதல் செயப்பட்டுள்ளது. குடும்ப கௌரவத்திற்காக அவ்விளம் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை