டெல் அவிவ்: காசா மீது முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பிப்போம் என்று இஸ்ரேல் ஏற்கனவே அறிவித்த போதிலும், இன்னும் தாக்குதலைத் தொடங்காமல் தயக்கம் காட்டுகிறது. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையே கடந்த அக். 7ஆம் தேதி தொடங்கிய யுத்தம் இன்னும் தொடர்ந்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதலை நடத்தி வருகிறது.
இதற்கிடையே காசா மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பிப்போம் என்று இஸ்ரேல் அறிவித்துப் பல நாட்கள் ஆகிவிட்டது. இருப்பினும், காசா இன்னும் படையெடுப்பை ஆரம்பிக்கவில்லை.
கருத்து வேறுபாடு: ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் காசா மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இருப்பினும், இன்னும் காசா மீது இஸ்ரேல் முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பிக்கவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இத குறித்து சர்வதேச வல்லுநர்கள் கூறுகையில், "இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையே சிறு சலசலப்புகள் இருக்கிறது. முக்கிய பிரச்சனைகளில் அனைவரும் ஒப்புக்கொள்ளும் முடிவுகளை எடுப்பதில் இஸ்ரேலுக்கு இப்போது சிரமம் இருக்கிறது" என்கிறார்கள். இஸ்ரேல் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.