Jul 15, 2026
Thisaigal NewsYouTube
துபாயில் 4,100 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்படும் உலகின் மிக விலையுயர்ந்த காபி!
உலகச் செய்திகள்

துபாயில் 4,100 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்படும் உலகின் மிக விலையுயர்ந்த காபி!

Share:

துபாய், நவம்பர்.01-

துபாயில் உள்ள கஃபே ஒன்றில், ஒரு காபியானது 1000 அமெரிக்க டாலருக்கு, அதாவது மலேசிய மதிப்பில் 4,100 ரிங்கிட்டிற்கு இன்று சனிக்கிழமை முதல் விற்பனை செய்யப்படுகின்றது.

உலகின் மிக விலையுயர்ந்த காபியாகக் கருதப்படும் இது, பனாமாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காபி விதைகளால் தயாரிக்கப்படுவதாக அதனை விற்பனை செய்யும் ஜுலித் கஃபே தெரிவித்துள்ளது.

செல்வ செழிப்பிற்குப் பெயர் பெற்ற துபாய் நாடு, உலகின் உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் ஆடம்பர வணிக வளாகங்களைக் கொண்டது.

தங்களின் விலையுயர்ந்த காபியை விற்பனை செய்ய துபாய் மிகச் சரியான இடமாகத் தாங்கள் கருதுவதாக ஜுலித் கஃபேயின் இணை நிறுவனர் Serkan Sagsoz தெரிவித்துள்ளார்.

துபாய் தொழிற்துறை நகரமாக இருந்தாலும் கூட, தற்போது காபி ரசிகர்கள் அதிகம் கூடும் நகரமாக மாறியுள்ளதால், இன்று முதல் 400 கோப்பைகள் விற்பனை செய்யப்படும் என்றும் Serkan தெரிவித்துள்ளார்.

Related News

சான் பிரான்சிஸ்கோ அல்காட்ராஸ் தீவு அருகே 20 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 3 பேர் மாயம்!

சான் பிரான்சிஸ்கோ அல்காட்ராஸ் தீவு அருகே 20 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 3 பேர் மாயம்!

வியட்நாமில் 11 மில்லியன் டாலர் வைரக் கடத்தல் கும்பல் அம்பலம்: நாட்டின் மிகப்பெரிய நகை நிறுவனம் சிக்கியதால் பரபரப்பு

வியட்நாமில் 11 மில்லியன் டாலர் வைரக் கடத்தல் கும்பல் அம்பலம்: நாட்டின் மிகப்பெரிய நகை நிறுவனம் சிக்கியதால் பரபரப்பு

சமையலறைக்குள் புகுந்து குளிர்சாதனப் பெட்டியைத் திறந்த கரடி: ஜப்பானில் பரபரப்பு!

சமையலறைக்குள் புகுந்து குளிர்சாதனப் பெட்டியைத் திறந்த கரடி: ஜப்பானில் பரபரப்பு!

துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து வாகனங்களை மறித்துக் கைது செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியது ICE

துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து வாகனங்களை மறித்துக் கைது செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியது ICE

ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் மின் நிலையங்கள், பாலங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் மின் நிலையங்கள், பாலங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

தேர்தல் நேர்மையை உறுதி செய்ய சமூக ஊடக விதிகளக் கடுமையாக்கியது ஜப்பான்

தேர்தல் நேர்மையை உறுதி செய்ய சமூக ஊடக விதிகளக் கடுமையாக்கியது ஜப்பான்