Jun 13, 2026
Thisaigal NewsYouTube
துபாயில் 4,100 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்படும் உலகின் மிக விலையுயர்ந்த காபி!
உலகச் செய்திகள்

துபாயில் 4,100 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்படும் உலகின் மிக விலையுயர்ந்த காபி!

Share:

துபாய், நவம்பர்.01-

துபாயில் உள்ள கஃபே ஒன்றில், ஒரு காபியானது 1000 அமெரிக்க டாலருக்கு, அதாவது மலேசிய மதிப்பில் 4,100 ரிங்கிட்டிற்கு இன்று சனிக்கிழமை முதல் விற்பனை செய்யப்படுகின்றது.

உலகின் மிக விலையுயர்ந்த காபியாகக் கருதப்படும் இது, பனாமாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காபி விதைகளால் தயாரிக்கப்படுவதாக அதனை விற்பனை செய்யும் ஜுலித் கஃபே தெரிவித்துள்ளது.

செல்வ செழிப்பிற்குப் பெயர் பெற்ற துபாய் நாடு, உலகின் உயர்ந்த கட்டிடங்கள் மற்றும் ஆடம்பர வணிக வளாகங்களைக் கொண்டது.

தங்களின் விலையுயர்ந்த காபியை விற்பனை செய்ய துபாய் மிகச் சரியான இடமாகத் தாங்கள் கருதுவதாக ஜுலித் கஃபேயின் இணை நிறுவனர் Serkan Sagsoz தெரிவித்துள்ளார்.

துபாய் தொழிற்துறை நகரமாக இருந்தாலும் கூட, தற்போது காபி ரசிகர்கள் அதிகம் கூடும் நகரமாக மாறியுள்ளதால், இன்று முதல் 400 கோப்பைகள் விற்பனை செய்யப்படும் என்றும் Serkan தெரிவித்துள்ளார்.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி