Jun 17, 2026
Thisaigal NewsYouTube
இளவரசி டயானாவின் பண்ணை வீடு தீக்கிரையானது
உலகச் செய்திகள்

இளவரசி டயானாவின் பண்ணை வீடு தீக்கிரையானது

Share:

இங்கிலாந்து, மே.29-

மறைந்த இளவரசி டயானா வளர்ந்த அல்தார்ப் எஸ்டேட் வளாகத்தில் உள்ள பண்ணை வீடு தீயில் முற்றிலும் அழிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இங்கிலாந்தின் கிங்ஸ்டோர்பில் உள்ள மில் லேன் பகுதியில் நிகழ்ந்ததாக நார்தாம்ப்டன்ஷயர் தீயணைப்புச் சேவைத் துறை தெரிவித்துள்ளது. தீயைக் கட்டுப்படுத்த 4 தீயணைப்புக் குழுக்கள் இணைந்து செயல்பட்டன.

தீயில் கட்டடம் முழுவதுமாக எரிந்த நிலையில், இது திட்டமிட்டச் செயலாக இருக்கலாம் என டயானாவின் சகோதரரும், எஸ்டேட் உரிமையாளருமான ஏர்ல் சார்ல்ஸ் ஸ்பென்சர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.

தீயில் சிக்கிய பண்ணை வீடு, அல்தார்ப் ஹவுஸிலிருந்து சுமார் 5 மைல்கள் தொலைவில் உள்ளது. இந்த அல்தார்ப் எஸ்டேட்டில்தான் இளவரசி டயானா தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார். அதோடு, அதே வளாகத்தில்தான் அவரது நினைவிடமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை