Oct 30, 2025
Thisaigal NewsYouTube
மேற்கு சுமத்ராவில் இரு மாவட்டங்களில் அவசர நிலை
உலகச் செய்திகள்

மேற்கு சுமத்ராவில் இரு மாவட்டங்களில் அவசர நிலை

Share:

ஜகார்த்தா, ஜூலை.22-

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவில் உள்ள சோலோக் மற்றும் லிமாபுலு கோட்டா பகுதிகளில் காட்டுத்தீ மற்றும் நிலத்தீ காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் வறண்ட கால நிலையில் வெப்பப் புள்ளிகள் கணிசமாக அதிகரித்ததே இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சோலோக் பகுதியிக் மட்டும், 14 மாவட்டங்களில் காடுகள் மற்றும் நிலத்தீ ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம் இப்போது ரியாவ் மற்றும் தெற்கு சுமத்ராவில் தீயணைப்பு முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்து வருவதால், ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி அணைக்கும் நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், கடினமான நிலப்பரப்பு மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறை தீயை அணைப்பதைச் சிரமமாக்குகிறது. லிமாபுலு கோட்டாவில் உள்ள பெரும்பாலான தீ இடங்கள் 70 முதல் 90 டிகிரி வரை சரிவுகளைக் கொண்டுள்ளன, இது தீயை அணைக்கும் முயற்சிகளை மிகவும் சவாலானதாக ஆக்குகிறது என்று அதிகாரிகள் மேலும் கூறினர்.

மேற்கு சுமத்ரா வனத்துறையின் புள்ளி விவரப்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஜூலை 19 வரை ஒன்பது மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் குறைந்தது 64 காட்டுத் தீ மற்றும் நிலத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவை 140.87 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கியது.

Related News