Apr 20, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

வளர்ப்பு பூனை இறப்பைத் தாங்க முடியாத சோகம்: உயிரை மாய்த்துக் கொண்ட பெண்

Share:

லக்னோ, மார்ச்.02-

உத்தர பிரதேச மாநிலத்தில் வளர்ப்பு பூனை இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல், 32 வயதான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அம்ரோஹா மாவட்டத்தின் ஹசன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பூஜா. இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு டில்லியைச் சேர்ந்தவருடன் திருமணம் ஆகியது. பிறகு சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பூஜா விவாகரத்து செய்துவிட்டார்.

பிறகு சொந்த ஊர் திரும்பி தாயாருடன் வசித்து வந்தார். தனிமையைப் போக்க அவர் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். அதன் உடனேயே பெரும்பாலான நேரத்தைச் செலவழித்து வந்தார். இந்த பூனை இரண்டு நாட்களுக்கு முன்னர் இறந்து போனது. இதனையடுத்து அதனை அடக்கம் செய்துவிடலாம் என பூஜாவிடம் அவரது தாயார் கூறினார். ஆனால் அதனை ஏற்காத இவர், பூனை மீண்டும் உயிர்பெற்று திரும்பும் என்றார்.

ஆனால், இரண்டு நாட்கள் ஆகியும் எதுவும் நடக்கவில்லை. இதனையடுத்து, அந்த பூனையை அடக்கம் செய்யலாம் என தாயார் மீண்டும் கூறினார். இதனையடுத்து தனது அறைக்குச் சென்ற பூஜா கதவை பூட்டிக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் மகள் வெளியே வராததால், அந்த அறைக்கு சென்று பார்த்த போது, பூஜா தூக்கில் தொங்கியதை பார்த்து தாயார் அதிர்ச்சி அடைந்தார். அருகில், பூனையின் உடலும் இருந்தது.

தகவல் அறிந்த போலீசார் பூஜாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு