Jun 17, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

வளர்ப்பு பூனை இறப்பைத் தாங்க முடியாத சோகம்: உயிரை மாய்த்துக் கொண்ட பெண்

Share:

லக்னோ, மார்ச்.02-

உத்தர பிரதேச மாநிலத்தில் வளர்ப்பு பூனை இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல், 32 வயதான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அம்ரோஹா மாவட்டத்தின் ஹசன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பூஜா. இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு டில்லியைச் சேர்ந்தவருடன் திருமணம் ஆகியது. பிறகு சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பூஜா விவாகரத்து செய்துவிட்டார்.

பிறகு சொந்த ஊர் திரும்பி தாயாருடன் வசித்து வந்தார். தனிமையைப் போக்க அவர் பூனை ஒன்றை வளர்த்து வந்தார். அதன் உடனேயே பெரும்பாலான நேரத்தைச் செலவழித்து வந்தார். இந்த பூனை இரண்டு நாட்களுக்கு முன்னர் இறந்து போனது. இதனையடுத்து அதனை அடக்கம் செய்துவிடலாம் என பூஜாவிடம் அவரது தாயார் கூறினார். ஆனால் அதனை ஏற்காத இவர், பூனை மீண்டும் உயிர்பெற்று திரும்பும் என்றார்.

ஆனால், இரண்டு நாட்கள் ஆகியும் எதுவும் நடக்கவில்லை. இதனையடுத்து, அந்த பூனையை அடக்கம் செய்யலாம் என தாயார் மீண்டும் கூறினார். இதனையடுத்து தனது அறைக்குச் சென்ற பூஜா கதவை பூட்டிக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் மகள் வெளியே வராததால், அந்த அறைக்கு சென்று பார்த்த போது, பூஜா தூக்கில் தொங்கியதை பார்த்து தாயார் அதிர்ச்சி அடைந்தார். அருகில், பூனையின் உடலும் இருந்தது.

தகவல் அறிந்த போலீசார் பூஜாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை