Jun 17, 2026
Thisaigal NewsYouTube
ஏரோபுஃலோட் கோலாலம்பூருக்குச் சேவையைத் தொடங்க வேண்டும்
உலகச் செய்திகள்

ஏரோபுஃலோட் கோலாலம்பூருக்குச் சேவையைத் தொடங்க வேண்டும்

Share:

மாஸ்கோ, மே.16-

ரஷ்யாவின் தேசிய விமான நிறுவனமான Aeroflot (ஏரோபுஃலோட்) உட்பட ரஷ்ய விமான நிறுவனங்கள், கோலாலம்பூருக்கு மீண்டும் நேரடிச் சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

மலேசியா மற்றும் ஆசியான் மக்களுக்கு எது தேவையோ, அந்த வசதிகளை ஏற்படுத்தித் தரும் நிலையில் ரஷ்யாவிடம் இந்த வேண்டுகோளைத் தாம் முன்வைப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கும், கோலாலம்பூருக்கும் மீண்டும் விமானச் சேவைத் தொடங்கப்படுவதை மலேசியா விரும்புவதாக ரஷ்யாவிற்கு நான்கு நாள் அலுவல் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்புவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனைத் தெரிவித்தார்.

ஏரோபுஃலோட், ரஷ்யாவின் மிகப் பெரிய விமான நிறுவனக் குழுமமாகும். மாஸ்கோவிற்கு கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் வாயிலாக விமானச் சேவையை மேற்கொண்டு வந்த ரஷ்யாவின் ஏரோபுஃலோட், கோலாலம்பூருக்கான தனது சேவையைக் கடந்த 2004 ஆம் ஆண்டில் நிறுத்தியது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை