Apr 23, 2026
Thisaigal NewsYouTube
ஈரான் - அமெரிக்கா மோதல்: கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வு
உலகச் செய்திகள்

ஈரான் - அமெரிக்கா மோதல்: கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வு

Share:

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அரசியல் பதற்றம் காரணமாக, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்துள்ளது. ஜூன் மாத விநியோகத்திற்கான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு விழுக்காடு உயர்ந்து, ஒரு பேரல் 103.23 அமெரிக்க டாலராகப் பதிவாகியுள்ளது.

முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள காலக்கெடுவும் முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத பட்சத்தில், எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Related News