Jun 17, 2026
Thisaigal NewsYouTube
தென் கொரியாவில் காட்டுத் தீ தொடர்பில் ஆடவர் கைது
உலகச் செய்திகள்

தென் கொரியாவில் காட்டுத் தீ தொடர்பில் ஆடவர் கைது

Share:

சியோல், மார்ச்.30-

தென் கொரியாவின் தென்கிழக்குப் பகுதியைப் பேரழிவிற்குள்ளாக்கிய காட்டுத் தீ தொடர்பில் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். செய்தி நிறுவனமொன்று அதனைத் தெரிவித்துள்ளது.

56 வயதான நபர் மார்ச் 22 ஆம் தேதி காலை 11:25 மணியளவில் வடக்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள உசியோங் கவுண்டியில் உள்ள ஒரு குடும்ப கல்லறையில் மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தபோது தீயை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

பல நாட்களாக வீசிய பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலையால் அன்டாங், சியோங்சாங், யோங்யாங் மற்றும் யோங்டியோக் போன்ற அருகிலுள்ள பகுதிகளுக்கு தீ வேகமாக பரவி, குறைந்தது 26 பேர் உயிரிழக்கக் காரணமானது.

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான கவுன் கோயில், வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் பிற வசதிகள் உட்பட சுமார் 4,000 கட்டிடங்களையும் தீ அழித்தது. எனினும், சந்தேக நபர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


வட கியோங்சாங் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாக கொரியா வனவியல் சேவை முன்பு அறிவித்தது. ஆயினும் சனிக்கிழமை இரவு தீ மீண்டும் எரியத் தொடங்கியது.


சுமார் 48,000 ஹெக்டேர் வனப்பகுதி அதாவது சியோல் நகரத்தின் அளவில் 80 சதவீதத்திற்கு சமமானது அது தென் கொரிய வரலாற்றில் மிக மோசமான காட்டுத் தீயாகும்.

தேசிய வன அறிவியல் நிறுவனம், தேசிய தடயவியல் சேவை மற்றும் தீயணைப்பு துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அடுத்த வார தொடக்கத்தில் கூட்டு விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை