மாட்ரிட் நகருக்கு அருகில் பரவி வந்த காட்டுத்தீயின் பரவல் தற்போது முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்குள்ள தீப்பிழம்புகளும் வெகுவாகக் குறைந்துள்ளதாக ஸ்பெயின் நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அங்கு நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக மீண்டும் புதிய தீ விபத்துகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
இந்த கோர விபத்தினால் இதுவரை 25,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு முற்றிலுமாக சாம்பலாகியுள்ள நிலையில், பாதுகாப்புக் கருதி சுமார் ஆயிரம் பேர் தொடர்ந்தும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.








