Jun 22, 2026
Thisaigal NewsYouTube
4 கிமீ தொலைவில் இருந்த ரஷ்ய வீரர்.. இன்ச் மாறாமல் தட்டி தூக்கிய உக்ரைன் ஸ்னைப்பர்.. இது புது சாதனை
உலகச் செய்திகள்

4 கிமீ தொலைவில் இருந்த ரஷ்ய வீரர்.. இன்ச் மாறாமல் தட்டி தூக்கிய உக்ரைன் ஸ்னைப்பர்.. இது புது சாதனை

Share:

மாஸ்கோ: உக்ரைன் போரில் சுமார் 3.8 கிமீ தொலைவில் இருந்த ரஷ்ய வீரரை, உக்ரைன் ஸ்னைப்பர் ஒருவர் வெற்றிகரமாகத் தட்டித்தூக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா கடந்தாண்டு உக்ரைன் மீது முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. இந்தப் போர் ஓராண்டைக் கடந்தும் இப்போது தொடர்ந்து வருகிறது. முதலில் இந்த போரில் ரஷ்யா ஆதிக்கம் செலுத்தினாலும் அதன் பிறகு உக்ரைன் பதிலடியை ஆரம்பித்தது.

இந்தப் போரில் இரு தரப்பிற்கும் இடையே பலத்த உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், இது சர்வதேச அளவிலும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தட்டி தூக்கிய ஸ்னைப்பர்: இதற்கிடையே போரில் அரங்கேறிய மிரள வைக்கும் சம்பவம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. சுமார் 3.8 கிமீ தொலைவில் இருந்து ஒரு ரஷ்ய வீரரை உக்ரைன் ஸ்னைப்பர் சுட்டுக் கொன்றுள்ளார். இத்தனை தொலைவில் இருந்தவரை வெற்றிகரமாகச் சுட்டுத் தள்ளிய அந்த உக்ரைன் ஸ்னைப்பர் 52 வயதான முன்னாள் தொழிலதிபர் வியாசெஸ்லாவ் கோவல்ஸ்கி என்பவர் என்றும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சுமார் 3.8 கிமீ தொலைவில் இருந்த நபரை அவர் சுட்டு தள்ளியுள்ளார். அதாவது உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால், கத்திப்பாராவில் இருந்த நபரை அசோக் பில்லர் அருகே இருந்து சுட்டு வீழ்த்தி இருக்கிறார். அந்த புல்லட் சென்று சேரவே சுமார் 9 நொடிகள் ஆகியுள்ளது. இந்த புல்லட் பட்ட அடுத்த நொடி அந்த ரஷ்ய வீரர், உடல் சிதறி உயிரிழந்தார்.

Related News

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி