Jun 17, 2026
Thisaigal NewsYouTube
உயிர் தப்பிய ஒரே பயணியைச் சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் நரேந்திர மோடி
உலகச் செய்திகள்

உயிர் தப்பிய ஒரே பயணியைச் சந்தித்து ஆறுதல் கூறினார் பிரதமர் நரேந்திர மோடி

Share:

புதுடெல்லி, ஜூன்.13-

குஜராத், ஆமதாபாத்தில் ஏர் இந்தியா, போயிங் டிரிம்லைனர் விமானம் விழுந்து நொறுங்கிய பேரிடரில் 242 பயணிகளில் உயிர் தப்பிய ஒரே பயணியான பிரிட்டிஷ் பிரஜையை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று நேரில் சென்று நலம் விசாரித்தார்.
ஆமதாபாத்தில் உள்ள பொது மருத்துவமனையில் C7 ஆவது வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் பிரஜையான 40 வயது ரமேஸ் விஸ்வாஷ் குமாரை, நேரில் சந்தித்த பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

உடல் நலம் தேறுவதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று மோடி உறுதி அளித்தார்.

நேற்று பிற்பகலில் நிகழ்ந்த இந்த விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் விமானத்தின் 11A இருக்கையில் அமர்ந்திருந்த ரமேஷ், அவசர வெளியேறும் வாயில், அருகாமையிலேயே இருந்ததால் கதவைத் திறந்து விமானத்திலிருந்து குதித்துள்ளார்.

தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ள அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினரைச் சந்தித்து விட்டு, ரமேஷ், தனது சகோதரனுடன் லண்டனுக்கு திரும்பும் வேளையில் இவ்விபத்து நிகழ்ந்ததாகக் கூறியுள்ளார்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை