நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட கடும் வெள்ளத்தைத் தொடர்ந்து, அங்கு இருப்பதாக நம்பப்படும் 11 மலேசியர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
போடே கோஷி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து வெள்ளம் ஏற்பட்டதில், சாலைகள், பாலங்கள் மற்றும் தொடர்பு வசதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மின்சாரம் மற்றும் தொடர்பு வலையமைப்புகள் பாதிக்கப்பட்டதே, 11 மலேசியர்களுடன் தொடர்பு துண்டிக்கப்படக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
7 மலேசியர்களைக் கண்டறிந்து பாதுகாப்பை உறுதிப்படுத்த, காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம், நேபாள அதிகாரிகள் மற்றும் தேடல்–மீட்புக் குழுக்களுடன் இணைந்து தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
நேபாளத்தில் உள்ள மலேசியர்கள் எச்சரிக்கையுடன் இருந்து, உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.








